டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் தமிழக அரசு வழங்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தமிழகத்தில் 393 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்கள் விவரம் வருமாறு:- 11 ஆசிரியர்கள் தேர்வு புதுக்கோட்டை மாவட்டத்தில்
* எண்ணை ஆதிதிராவிடர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன்,
* காவேரி நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வின்சென்ட்,
* தாஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளியின் முதுகலை ஆசிரியர் ராஜகோபால்,
* சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் புகாரி,
* ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாஸ்கரன்,
* மணமேல்குடி ஒன்றியம் மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி,
* அரிமளம் ஒன்றியம் பூனையன் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சாத்தப்பன்,
* மேற்பனைக்காடு கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சதீஷ்குமார்,
* அன்னசத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பவானி,
* வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடன ஆசிரியர் குமார்,
ஓரியண்டல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம்
ஆகிய 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.