புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மாலை நேரத்தில் மாங்கோட்டை, செம்பட்டிவிடுதி, வாராப்பூர், மழையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லை என குற்றச்சாட்டு பல நாட்களாக இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது போதுமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளி மாணவர்கள் ஏ 4-ம் எண் கொண்ட அரசு பஸ்சில் மட்டுமே பயணித்து வருகின்றனர். இதேபோல நேற்றும் மாணவர்கள் மற்ற பஸ்களில் ஏறாமல் ஏ 4-ம் எண் பஸ்சில் மட்டுமே ஏறினர். பஸ்சில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பஸ் மிகவும் சாய்ந்த நிலையில் பயணித்தபோது, மாணவர்கள் பஸ்சில் படிக்கட்டு மற்றும் பின்புறம் உள்ள ஏணி ஆகியவற்றில் தொங்கியவாறு பயணித்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனை அருகே வந்தபோது, அந்த பஸ்சை சிறைபிடித்தனர். அப்போது பொதுமக்கள், டிரைவரிடம் இப்படி மாணவர்களை ஏற்றி சென்றால் பெரிய அளவில் விபரீதம் ஏற்பட்டால் என்ன ஆகும் என்று கேட்டனர்.
இதையடுத்து பஸ்சில் மாணவர்கள் இப்படி தொங்கியவாறு பயணித்தால் நான் பஸ்சை இயக்க மாட்டேன் என கூறி டிரைவர் பஸ்சை இயக்க மறுத்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரெத்தினகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவர்களை எச்சரித்து மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பஸ்சை டிரைவர் எடுத்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.