மணமேல்குடி ஒன்றியத்தில் மருத்துவ மதிப்பீட்டு முகம் நடைபெற்றது.






மருத்துவ மதிப்பீட்டு முகாமினை அறந்தாங்கி கல்வி மாவட்ட ( இடைநிலை) மாவட்ட கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திரு ராஜாராம் அவர்கள்  குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

மணமேல்குடி  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  திரு ஜீவானந்தம் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்வில் அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்கநிலை மாவட்ட கல்வி அலுவலர் திரு சண்முகம் அவர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன்  அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

சிறப்பு விருந்தினராக மணமேல்குடி ஒன்றிய துணை பெரும் தலைவர் திரு எஸ் எம் சீனியர் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

குழந்தை நல மருத்துவர் சுகன்யா, முடக்கியல் நிபுணர் திரு ஜெயகர், மனநல மருத்துவர் சுந்தரமூர்த்தி, காது மூக்கு தொண்டை நிபுணர் மருத்துவர் சுனைத்கான் , கண் மருத்துவர் சிவரஞ்சனி  ஆகியோர் மாணவர்களை பரிசோதித்து மருத்துவ கருத்துக்களை வழங்கினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட  அலுவலர் 
திரு தங்கமணி அவர்கள் மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வின் முடிவில் வட்டார கல்வி அலுவலர் திருமதி இந்திராணி அவர்கள் நன்றியுரை கூறினார்.

 நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மணமேல்குடி வட்டார வளமையை மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்   திரு.செழியன் அவர்கள் அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் திரு இளையராஜா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி கோசலை ஊராட்சி மன்ற தலைவர் திரு நடேசன் மஞ்சுளா அவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பாசிரியர்கள் இயன் முறை மருத்துவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments