மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து முன்னாள் மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்
இதுதொடர்பாக முன்னாள் ஆட்சியர் லலிதா அனுப்பி உள்ள உத்தரவு கடிதத்தில் 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205(1அ) மற்றும் 205(11) இன் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் என்பவர் ஊராட்சி சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது தொடர்பாக அவர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், குற்றச்சாட்டுகளுக்கு அவரால் அளிக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை நன்கு பரிசீலனை செய்து ஆணைக்காரன் சத்திரம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
இந்த அறிக்கை 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட பிரிவு 262 (1)ன் படி தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம் பதவி நீக்க ஆணையை கனகராஜிடம் நேரில் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழங்கினார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.