புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் மாா்ச் 11ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், மாநிலம் முழுவதும் உள்ள சுமாா் 150 பிரபல தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.
இந்த முகாமுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் (பொ) மா. செல்வி தலைமை வகித்துப் பேசும்போது, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 18 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட 10 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஐடிஐ முடித்தவா்களும் கலந்து கொள்ளலாம். வரும்போது, தங்களின் கல்விச் சான்று, சுய விவரக் குறிப்பு மற்றும் புகைப்படங்களையும் எடுத்து வர வேண்டும்.
தனியாா்துறை வேலை தேடுவோா் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் செல்வி.
கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலா்கள் மோ. மணிகண்டன், பெ. வேல்முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆனந்த், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.