தமிழ்நாட்டில் வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில், ‘உடான்’ திட்டத்தின் கீழ் விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என உறுப்பினரின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் விமான போக்குவரத்து அமைச்சகம் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறிய நகரங்களில்குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 27ந்தேதி தொடங்கி வைத்தார். உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் 128 புதிய வழித்தடங்கலில் விமான சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமான சேவைகளை மேற்கொள்ள 5 விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசின் உதான் திட்டத்தில் தமிழக அரசு இணைந்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டிலும் வேலூர், சேலம் உள்பட பல மாவட்டங்களில் சிறியரக விமானம் இயக்கப்படும் வகையில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. வேலூர், சேலம், ஓசூர், நெய்வேலி, தஞ்சாவூர், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்பட பல மாவட்டங்களில் விமான நிலையம் அமைக்கக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள விமான போக்குவரத்து அமைச்சகம், வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில், ‘உடான்’ திட்டத்தின் கீழ் விமான சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
வேலூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 2021ல் விமானம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை விமான சேவை தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.