புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் முதியவர் திடீர் தர்ணா




புதுக்கோட்டை திருவப்பூரை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 75). இவர் குடியிருக்கும் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புக்கு பணம் கட்டிய பின்பும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தார்ச்சாலை வசதிக்காக தோண்டிய சாலை 444 நாட்கள் கடந்தும் பணி நடைபெறவில்லை எனவும், இதனை கண்டித்து அவர் பதாகையை கையில் ஏந்தியபடி புதுக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை போராட்டம் நடத்தினார். தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments