திருமயம் ஒன்றியம், அரசம்பட்டியில் அவ்வையார் ஆரம்ப பள்ளி உள்ளது. இங்கு மொத்தம் 72 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமையாசிரியராக சுமதி பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் (தொடக்கநிலை) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியை சுதா 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மாவட்ட கல்வி அலுவலர் மாணவர்களிடம் தாங்கள் படித்து என்னவாக போகிறீர்கள்? என்ற விருப்பத்தை கரும்பலகையில் எழுதிக்காட்டுங்கள் என கூறினார். மாணவர்களும் தங்களது விருப்பத்தை கரும்பலகையில் எழுதினார்கள். இதில் மாணவி கனிஷ்கா தான் நன்றாக படித்து ஆசிரியையாக வேண்டும்.
மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று கூறினார். உடனே மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் மாணவி கனிஷ்காவை பாடம் நடத்த அனுமதித்தார். மாணவி கனிஷ்காவும் தன்னுடைய பாடப்புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு சக மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். மாணவர்களும் கனிஷ்கா கூறுவதை கேட்டு சேர்ந்து படிக்க ஆரம்பித்தனர். உடனே மாவட்டக்கல்வி அலுவலர் கனிஷ்காவை வகுப்பாசிரியர் அமரும் நாற்காலியில் அமர வைத்து 2-ம் வகுப்புக்கு புதிதாக ஒரு ஆசிரியர் வந்துள்ளார் என கூறி பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.