அறந்தாங்கி ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த வாகன நிறுத்தம் வசதியை ஏற்படுத்த கோரும் டெண்டர் - தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் வெளியிடப்பட்டுள்ளது
ஒரு நாட்டினுடைய வளர்ச்சியில் போக்குவரத்து மிகவும் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. சாலைப் போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து ஆகியவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
இதில், ரயில்வே போக்குவரத்து மூலமாக மக்கள் எளிதில் பாதுகாப்பாக குறைந்த செலவில் பயணம் செய்ய முடியும். கழிப்பறை வசதி மற்றும் வசதியான படுக்கை வசதி இருப்பதால், நோயாளிகள், பெண்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் பயணம் செய்ய வசதியாக இருக்கிறது.
அதுபோல சரக்கு போக்குவரத்துகள் குறைந்த செலவில் நீண்ட தூரத்திற்கு அதிக அளவில் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கிறது.
ரயில் போக்குவரத்தினால் சாலை விபத்துகள் குறையவும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவும் அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, ரயில் போக்குவரத்தை இந்தியாவில் அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் அறிஞர்களும், பொதுமக்களும் விரும்புகிறார்கள்.
அறந்தாங்கி ரயில் நிலையம் (ATQ)
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி ரயில் நிலையம் மிகவும் பழமையான ரயில் நிலையம் ஆகும். 100 ஆண்டுகள் பழமை வாயந்த இந்த ரயில் நிலையம் 1903-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அறந்தாங்கி ரயில் நிலையம் திருவாரூர் காரைக்குடி பாதையில் உள்ளது .
காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரையிலான மீட்டர் கேஜ் பயணிகள் இரயில் சேவை 14.03.2012 தேதியும் திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரையிலான மீட்டர் கேஜ் பயணிகள் இரயில் சேவை 15.10 2012 தேதியிலும் நிறுத்தப்பட்டன.
முதற்கட்டமாக காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை( 74 கிலோமீட்டர்) அகல இரயில் பாதை அமைக்கப்பட்டு 31.03.2018 ம்தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக பட்டுக்கோட்டை யில் இருந்து திருவாரூர் வரை (75கிலோமீட்டர்) அகல இரயில் பாதை அமைக்கப்பட்டு 30.03.2019 தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மேற்கண்ட அகல இரயில் பாதை அமைக்க சுமார் 750 கோடி ரூபாய் இரயில்வே துறையால் செலவு செய்யப்பட்டுள்ளது.
இத்தடத்தில் மீட்டர் கேஜ் சமயத்தில் இயங்கிய சென்னைக்கான விரைவு இரயில் சேவை மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரை இயங்கிய அனைத்து பயணிகள் இரயில்களை இயக்கிட திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர் ,நாகப்பட்டினம் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி தலைவர்கள், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி இரயில் உபயோகிப்போர் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் ,சமூக அமைப்புகள், வெளிநாட்டில் வாழும் இப்பகுதி மக்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியோர் இணைந்து தொடர்ந்து இரயில்வே அமைச்சர் ,இரயில்வே போர்டு தலைவர் இரயில்வே துறை அதிகாரிகள் அனைவருக்கும் கோரிக்கை வைத்துக்கொண்டு வருகின்றனர்.
டெண்டர்
தற்போது அறந்தாங்கி வழியாக 3 ரயில்கள் இயங்கி வருகிறது, வரக்கூடிய நாட்களில் நிறைய ரயில்கள் இயங்க உள்ளன..
தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது
அறந்தாங்கி ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த பார்க்கிங் ஸ்டாண்டை நிர்வகிப்பதற்கான விலைப்பட்டியல் அழைப்பு
அறந்தாங்கி ரயில் நிலையத்தில் 900 சதுரமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒருங்கிணைந்த வாகன நிறுத்துமிடத்தை 180 நாட்களுக்கு வழங்கிய நாளிலிருந்து அல்லது வழக்கமான டெண்டரை இறுதி செய்யும் வரையில் எது முன்னதாகவோ அந்த இடத்தைப் பார்வையிட ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து மேற்கோள்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமுள்ள தரப்பினர் தெற்கு ரயில்வே இணையதளமான www.sr.indianrailways.gov.in இல் பதிவேற்றம் செய்யப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது வேலை நேரத்தில் SS/ATQ & Sr.DCM/O/TP] உடன் கிடைக்கும் பரிந்துரைக்கப்பட்ட மேற்கோள் வடிவத்தைப் பெறவும். . முத்திரையிடப்பட்ட மேற்கோள்களை முதுநிலை கோட்ட வணிக மேலாளர், திருச்சிராப்பள்ளி ஜே.என்., தெற்கு இரயில்வே என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்,,
மேலும் அதை முதுநிலை கோட்ட வணிக மேலாளர், திருச்சிராப்பள்ளி சந்திப்பு ன்., தெற்கு இரயில்வே அலுவலகத்தில் உள்ள பெட்டியில் விட வேண்டும். : 10.04.2023 அன்று காலை 10 : 00 மணி முதல் மதியம் 03: 00 மணி வரை
மற்றும் 10.04.2023 அன்று 15:30 மணிக்கு மேற்கோள் திறக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.04.2023
மேலும் கூடுதல் தகவலுக்கு கீழே உள்ள புகைப்படங்களில் விவரங்களை பார்க்கவும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.