ஜூன் 2024ல் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலைப் பணி முடிவுறும் - தமிழக சட்டசபையில் எ.வ. வேலு தகவல்






3 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், 21-ந் தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து 23, 24, 27, 28 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரின் பதில் உரையும் இடம்பெற்றன.

கடந்த மாதம் 29-ந் தேதி முதல், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்துவருகிறது. இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை (விடுமுறை), 3-ந் தேதி (சட்டசபை கூட்டம் இல்லை), 4-ந் தேதி (மகாவீரர் ஜெயந்தி) ஆகிய 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை.

3 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.

இந்தநிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி நேரம் தொடங்கியது. விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலைப் பணிகள் 2024 ஜூன் மாதத்திற்குள் முடிவடையும், மாநில அரசின் அழுத்தத்தால் முதல் கட்ட பகுதியில் 45% பணிகள் முடிவுற்றுள்ளதாக மத்தியஅரசு மற்றும் ஒப்பந்ததாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

முன்னதாக டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் விவகாரம் குறித்து மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா (திமுக), பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments