மணமேல்குடி ஒன்றியத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு வகுப்பறை மேலாண்மையை நிர்வகித்தல் மற்றும் பெற்றோர்களின் ஈடுபாடு குறித்து ஒரு நாள் குறுவள மைய பயிற்சி!




மணமேல்குடி ஒன்றியத்தில்  1 ம் வகுப்பு முதல் மற்றும் 5 ம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு வகுப்பறை மேலாண்மையை நிர்வகித்தல் மற்றும் பெற்றோர்களின் ஈடுபாடு தலைப்பில் ஒரு நாள் குறுவள மைய பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியதிற்கு உட்பட்ட   மணமேல்குடி  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  1 ம் முதல் மற்றும் 5 ம் வகுப்பு கற்பிக்கின்ற தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நடைபெறும் குறுவள மைய பயிற்சியினை  அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் தொடக்கநிலை மதிப்புக்குரிய திரு சண்முகம் அவர்களின் தலைமையில்  தொடங்கியது.

மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி இந்திராணி அவர்கள் மற்றும் மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்பயிற்சியில் மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் பேசியதாவது ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறை மேலாண்மையை நிர்வகிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களின் மனநிலை அறிந்து கற்றல் கற்பித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதேபோல் பெற்றோர்களின் ஈடுபாடு அதிகரிக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

மேலும்  இப்பயிற்சியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் முறையில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மாநில அளவில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் வடக்கு அம்மாபட்டினம் முஸ்லிம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதலிடம் பெற்று மாநில எழுத்தறிவு விருது பெற்ற மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சித்திரா தேவி மற்றும் தன்னார்வலர் கன்சுல் சுல்தான் ஆகியோரை பாராட்டி  சிறப்பித்தார்கள்.

 இப்பயிற்யினை கருத்தாளர்களாக தலைமை ஆசிரியர்கள்  பவுலின் அருள் விஜயா, அனுசுயா,  மற்றும் ஆசிரியர்கள் மாலதி  தமிழரசி கிரேசி மேரி அடைக்கலம் ஜோதி விஜிஸ்ரீ ஜெபமலர் பரகத் நிஸா, பெனோ பாக்கியராஜ் ஆகியோர் செயல்பட்டனர்.

இப்பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேல்சாமி அங்கயற்கன்னி  ஆகியோர் கலந்து கொண்டனர் .








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments