ஆவுடையார்கோவில் அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணி தடுத்து நிறுத்தம்; சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!



ஆவுடையார்கோவில் அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா பூவலூர் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக குடிதண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில் ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழுத் தலைவர் உமாதேவி முயற்சியில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் பூவலூர் ஊராட்சியில் கீழக்குடியிருப்பில் நடந்து வருகிறது.

ஊரில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில், கீழக்குடியிருப்பு பகுதிக்கு சுமார் 800 மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய் வாய்க்கால் வழியாக பதிக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது, ஒரு சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு நேற்று காலை குடிநீர் குழாய் பதிக்கும் பொக்லைன் எந்திரத்தை தடுத்து நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டனர்.

அப்போது இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பெருமருதூர்-ஆவுடையார்கோவில் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments