புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அம்மாபட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடந்த ஒரு வருடமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு ஏழைகள், சாலையோர ஆதரவற்றோர்கள், வழிப்போக்கர்கள் என 210 பேருக்கு இலவசமாக சிக்கன், மட்டன், வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகளுக்கு வீடு தேடியும், பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு அவர்களுடைய இருப்பிடத்திற்கு சென்றும், வயது முதிர்ந்தவர்கள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கு பார்சல் செய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் செய்து வருகின்றனர். ஏழைகளுக்கு உணவு வழங்கும் இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.