தொண்டி கடலில் பாதுகாப்பு ஒத்திகை மீனவர் படகுகளில் சோதனை




ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல் தேவிபட்டினம் வரை கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் நடத்திய சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையின் போது மீனவர்களின் படகுகளில் திடீர் சோதனை நடத்தினர்.

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடல் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இரு நாட்களாக எஸ்.பி.பட்டினம் முதல் தேவிபட்டினம் வரை கடலோர பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் எஸ்.ஐ., அய்யனார், நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் எஸ்.பி.பட்டினம், பாசிபட்டினம், தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி கடல் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

படகில் கடலுக்குள் சென்று மீனவர்களின் படகுகளை திடீர் சோதனையிட்டனர். அந்நியர்கள், பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து கண்காணித்தனர். மீனவர்களிடம் சந்தேகப்படும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments