தமிழ்நாட்டில் இன்று ஏப்ரல் 09 பிறை தென்பட்டது - நாளை ஏப்ரல் 10 நோன்பு பெருநாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு..




தமிழ்நாட்டில் இன்று ஏப்ரல் 09 பிறை தென்பட்டது - நாளை ஏப்ரல் 10 நோன்பு பெருநாள் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்ஏற்கனவே பிறை தென்படவில்லை என்று அறிவிப்பு செய்திருந்தோம். இந்த நிலையில் கோவை - சாரமேடு கரும்பு கடை  மற்றும் குமரி - வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக செய்தி வந்தது அதை சற்று முன் விசாரித்து உன்மை என்று உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்கண்டவாறு பிறை அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிடுகிறது.

தமிழகத்தில் ஷவ்வால் மாதம் மற்றும் நோன்புப் பெருநாள் பற்றிய அறிவிப்பு. 
பிறை தேட வேண்டிய நாளான 09.04.2024 செவ்வாய்க் கிழமையன்று தமிழகத்தின் கோவை - சாரமேடு கரும்பு கடை  மற்றும் குமரி - வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் 09.04.2024 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகிறது என்பதையும் 10.04.2024  புதன்கிழமை நோன்பு பெருநாள் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
99520 35 444, 99520 56 444, 7550277338.



கோபாலப்பபட்டினம் TNTJ கிளை சார்பில் நோன்பு பெருநாள் தொழுகை குறித்த அறிவிப்பு

நபிவழியில் பெருநாள் தொழுகை

இன்ஷா அல்லாஹ்

பெருநாள் உரை:

சகோ. அப்துல் பாரி Misc

நாள் : 10-04-2024

நேரம்: காலை 7:00 மணிக்கு 

இடம்: அரண்மனை தோப்பு,கோபாலபட்டினம்

நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைக்கும் முசலா என்னும் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (புகாரி: 956) (முஸ்லிம்: (1612)



பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

உளூ செய்துவிட்டு வரவும்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோபாலபட்டினம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம்

844 108 108 3

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments