வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக கிராமமக்கள் வைத்த பதாகையால் பரபரப்பு ஏற்பட்டது.
அசுத்தம் கலந்த விவகாரம்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் நடந்து 15 மாதங்கள் ஆகிய நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை.
பதாகையால் பரபரப்பு
இதனை கண்டித்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வேங்கைவயல் கிராமமக்கள் அந்த கிராமத்தில் 2 இடங்களில் பதாகை வைத்துள்ளனர். அந்த பதாகையில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவத்தில் நீதி கிடைக்காததால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.