அறந்தாங்கி தொகுதியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்கள் தமிழக உள்துறைச் செயலாளர் P.அமுதா அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக இருந்து வரும் அறந்தாங்கி நகரில் உள்ள காவல் நிலையத்தை பெரிய ரக காவல் நிலையமாக மேம்படுத்தவும், அறந்தாங்கி நகரின் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் கூடுதல் காவல் நிலையம் ஒன்றும் அமைத்துத்தரக் கோரியும், ஆவுடையார்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் உள்ள நீர் தாங்கி வண்டி 2000-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளதால், தீயணைப்பு பணிகளுக்கு விரைந்து செல்ல இயலாத நிலை உள்ளது. இதனை மாற்றி புதிய நீர் தாங்கி வண்டி வழங்கவும், பூங்குடி கிராமத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய தீயணைப்பு நிலையம் கட்டித்தரவும், கரூரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் காவல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டிடம் கட்ட இந்த ஆண்டிலேயே நிதி ஒதுக்கி ஆவணம் செய்திட கோரியும் தமிழக உள்துறைச் செயலாளர் P.அமுதா இ.ஆ.ப அவர்களை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.