திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு அறந்தாங்கி வழியாக சிறப்பு ரெயில்




கோடை விடுமுறையில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. இதற்கிடையே, திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) ரெயில் நிலையத்தில் இருந்து விருதுநகர், மானாமதுரை, அறந்தாங்கி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில்(எண்:06031) வருகிற 13-ந் தேதி, 20-ந் தேதி மற்றும் 27-ந் தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நண்பகல் 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில்(எண்:06032) வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 14-ந் தேதி, 21-ந் தேதி மற்றும் 28-ந் தேதிகளில் மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயிலில், இரண்டு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 3 மூன்றடுக்கு எகனாமி வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். ரெயில் இருமார்க்கங்களிலும், கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராமபட்டிணம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments