பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக பாலங்களில் கூட்டமாக அமர்ந்து வீண் அரட்டையடிக்கும் நபர்களுக்கு ₹20,000 அபராதம் விதிக்கப்படும் என்று கருங்குழிகாடு - வெட்டிவயல் ஜமாத் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஜமாத் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொதுமக்கள் புகார்
நமது ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் மாலை நேரங்களில் ஊரில் உள்ள பாலங்களில் கூட்டமாக அமர்ந்து கொண்டு, அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களுக்கும், அருகில் உள்ள வீடுகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுத்தி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், சிலர் ஆபாசமான வார்த்தைகளைப் பேசுவதாகவும், தங்களது இருசக்கர வாகனங்களைச் சாலையின் நடுவே நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாகவும் பாலத்தின் அருகில் வசிக்கும் குடும்பத்தினர் ஜமாத் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.
இன்று முதல் தடை
இதனைக் கருத்தில் கொண்டு, இன்று (13/07/2026) முதல் ஊரில் உள்ள மூன்று பாலங்களிலும் மாலை நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் யாரும் கூட்டமாக அமரக் கூடாது என ஜமாத் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடுமையான எச்சரிக்கை
இந்த அறிவிப்பை மீறி பாலங்களில் அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ₹20,000 (ரூபாய் இருபது ஆயிரம் மட்டும்) அபராதம் விதிக்கப்படும். அத்துடன், விதிமுறைகளை மீறுபவர்களின் பெற்றோர் அல்லது குடும்பத்தினருக்கு இதுகுறித்த தகவல் உடனடியாகத் தெரிவிக்கப்படும்.
தேவையெனில் காவல்துறை மூலம் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜமாத் தலையிடாது
இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், அவதிக்குள்ளாகும் அவர்களது குடும்பத்தின் நல்லது கெட்டது என எதற்கும் ஜமாத் நிர்வாகம் பொறுப்பேற்காது என்றும், இதில் ஜமாத் தலையிடாது என்றும் அந்த அறிவிப்பில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று (ஜூலை 13) முதல் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக கருங்குழிகாடு - வெட்டிவயல் ஜமாத் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.