கோட்டைப்பட்டிணம் பள்ளிவாசலில் மார்க்க கல்வியுடன் கூடிய உலகக்கல்வி பகுதிநேர வகுப்பு நடைபெறுகிறது



கோட்டைப்பட்டிணத்தில் வருங்கால இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தினந்தோறும் பெரியப்பள்ளியில், மாலை 5.00 மணியிலிருந்து இரவு 9.00 மணி வரையில்,
கோட்டைப்பட்டினம் அனைத்து இமாம்களின் முயற்சியின் காரணமாக அல் மத்ரஸத்துன் நிஜாமிய்யா அரபி பாடசாலை மற்றும் டியூஷன் சென்டர் நடத்தப்படுகிறது. இதில் மாணவர்களுக்கான உலக கல்வி மற்றும் மார்க்க கல்வி பயிற்றுவிக்கப்பட்டு இறைவனின் அருளால் நல்ல முறையில் நடந்தேறி வருகிறது.



இக்காலக்கட்டத்தில் திரும்பும் இடமெல்லாம் ஃபித்னாக்களும், அனாச்சாரங்களும், அசிங்கங்களும் நிரம்பி வழியும் இக்காலகட்டத்தில் நமது வருங்கால இளைய தலைமுறைகள் நல்ல ஒழுக்க சீலர்களாகவும், நாகரீகத்தை பேணி நடக்கக்கூடியவர்களாகவும் உருவெடுக்க நம் வீட்டு பிள்ளைகளையும் இப்பாடசாலைக்கு அனுப்பி வைத்து அவர்களின் எதிர் காலத்தினை பிரகாசமுடையதாக மாற்றுவதற்கு பெற்றோர்களாகிய தாங்கள் முன் வரவேண்டும் என அனைத்து இமாம்களின் சார்பாகவும், கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் சார்பிலும் மற்றும் இந்த இணையதள செய்திகள் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இங்ஙனம்.
அனைத்து இமாம்கள் கூட்டமைப்பு மற்றும்
முஸ்லிம் ஜமாஅத், கோட்டைப்பட்டினம்.

தகவல்:
உற்று நோக்கு செய்தித் தளம்…
கோட்டைப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook சமூக வலைதள பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்... 


Post a Comment

0 Comments