R.புதுப்பட்டினம் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்பட்ட மாபெரும் முதலாம் ஆண்டு குர்ஆன் மனனப் போட்டி



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம் மீமிசல் அருகில் உள்ள R.புதுப்பட்டினத்தில் 13/08/2019 செய்வாய்க்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு  அல்அமீன் வளாகத்தில் முதல் முறையாக குர்ஆன் மனனப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக மௌலவி முஹம்மது இப்ராஹிம் மற்றும் மௌலவி அலி உஸ்மான் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.




இந்த போட்டியில் சுமார் 23 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டிக்கு மாணவர்களை தயார்படுத்திய மௌலவி மன்சூர் மற்றும் மௌலவி கௌஸ் ஆகியோருக்கு மன்றத்தின் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர். அனைத்து ஜமாத் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், மன்றதினர்கள் மற்றும் பெரும் திரளாக தாய்மார்கள் கலந்து கொண்டானர். விழாவிற்கான ஏற்பாடுகளை அல் அமீன் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : R.புதுப்பட்டினம் அப்துல்லாஹ்

Post a Comment

0 Comments