கோபாலப்பட்டிணத்தில் நாளை மே.27 ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை: ஜமாஅத் நிர்வாகம் அறிவிப்பு!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நாளை மே.28 ஹஜ் பெருநாள் (தியாகத் திருநாள்) சிறப்பு தொழுகை நடைபெறும் இடங்கள் மற்றும் நேரங்கள் குறித்து கோபாலப்பட்டிணம் சுன்னத்வல் ஜமாஅத் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

​அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
​இன்ஷா அல்லாஹ் நாளை 28-05-2026 (வியாழக்கிழமை) ஹஜ் பெருநாள் தொழுகை கோபாலப்பட்டிணம் ஈத்கா தொழுகை மைதானத்தில் காலை சரியாக 7:00 மணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் நடைபெறும்.

​மழை பெய்தால் மாற்று ஏற்பாடு
​ஒருவேளை நாளை மழை பெய்தால், சிறப்பு தொழுகை கீழ்க்கண்ட பள்ளிவாசல்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
பெண்களுக்கான தொழுகை இடங்கள் (காலை 7:00 மணி)
​அவுலியா நகர் பள்ளிவாசல்
​கடற்கரை பள்ளிவாசல்
​காட்டுக்குளம் பள்ளிவாசல்
ரஹ்மானியா பெண்கள் மதரஸா
ஆண்களுக்கான தொழுகை இடம் (காலை 7:30 மணி)
​பெரிய பள்ளிவாசல்
பொதுமக்கள் அனைவரும் இந்த அறிவிப்பைப் பின்பற்றி, குறித்த நேரத்திற்கு வருகை தந்து பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ளுமாறு ஜமாஅத் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments