புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள குளமங்கலம் வடக்கு அரசுப் பள்ளிக்கு, இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் ரூ.3 லட்சத்தில் விழா மேடை அமைத்து கொடுத்துள்ளனர்.
குளமங்கலம் வடக்கு கிராமத்திலுள்ளஅரசு உயர்நிலைப் பள்ளியில் குளமங்கலம் தெற்கு, திருநாளூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
தொடர்ந்து பொதுத் தேர்வுகளில் இப்பள்ளி நூறு சதவிகிதத் தேர்ச்சியை பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் நடத்தப்பட்டு வரும் ஆண்டு விழாவுக்கு மேடை இல்லாததால், தரையில் கொட்டகை அமைத்து பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, தாங்கள் படித்த பள்ளிக்கு சொந்த செலவில் விழா மேடை அமைப்பது என முடிவெடுத்தனர். இதைத்தொடர்ந்து, ரூ. 3 லட்சத்தில் விழா மேடை கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, அண்மையில் நிறைவு பெற்றன.
இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை பள்ளித் தலைமையாசிரியர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வத்திடம் விழா மேடையை முன்னாள் மாணவர்கள் அர்ப்பணித்தனர். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குளமங்கலம் வடக்கு கிராமத்திலுள்ளஅரசு உயர்நிலைப் பள்ளியில் குளமங்கலம் தெற்கு, திருநாளூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
தொடர்ந்து பொதுத் தேர்வுகளில் இப்பள்ளி நூறு சதவிகிதத் தேர்ச்சியை பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் நடத்தப்பட்டு வரும் ஆண்டு விழாவுக்கு மேடை இல்லாததால், தரையில் கொட்டகை அமைத்து பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, தாங்கள் படித்த பள்ளிக்கு சொந்த செலவில் விழா மேடை அமைப்பது என முடிவெடுத்தனர். இதைத்தொடர்ந்து, ரூ. 3 லட்சத்தில் விழா மேடை கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, அண்மையில் நிறைவு பெற்றன.
இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை பள்ளித் தலைமையாசிரியர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வத்திடம் விழா மேடையை முன்னாள் மாணவர்கள் அர்ப்பணித்தனர். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.