காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரையிலான அகல ரயில் பாதையில் அறந்தாங்கி மார்க்கமாக மீண்டும் சென்னை வரை விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினரும், திருச்சி ரயில்வே கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவருமான திருச்சி
என். சிவாவிடம் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் தûலைவர் பா.வரதராஜன், அறந்தாங்கி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீதர் மற்றும் செயலாளர் வி.சி.செல்வம் உள்ளிட்டோர் திருச்சி சிவாவிடம் நேரில் மனு அளித்தனர்.
மனுவில் ஏற்கெனவே இதே மார்க்கத்தில் இயங்கி வந்த இராமேஸ்வரம் முதல் காரைக்குடி வழியாக சென்னைக்கு சென்ற ரயிலை விரைவில் இயக்க வேண்டும், அதை மானாமதுரையிலிருந்து தொடர் இணைப்பாக மதுரை வரை இயக்க வேண்டும், மேலும் தினமும் இரண்டு முறை சென்று வந்த கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், அறந்தாங்கி ரயில் நிலையித்தில் பயணசீட்டு கணினி மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மனுவை பெற்றுக்கொண்ட திருச்சி சிவா, ரயில்வே துறை உயரதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
என். சிவாவிடம் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் தûலைவர் பா.வரதராஜன், அறந்தாங்கி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீதர் மற்றும் செயலாளர் வி.சி.செல்வம் உள்ளிட்டோர் திருச்சி சிவாவிடம் நேரில் மனு அளித்தனர்.
மனுவில் ஏற்கெனவே இதே மார்க்கத்தில் இயங்கி வந்த இராமேஸ்வரம் முதல் காரைக்குடி வழியாக சென்னைக்கு சென்ற ரயிலை விரைவில் இயக்க வேண்டும், அதை மானாமதுரையிலிருந்து தொடர் இணைப்பாக மதுரை வரை இயக்க வேண்டும், மேலும் தினமும் இரண்டு முறை சென்று வந்த கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், அறந்தாங்கி ரயில் நிலையித்தில் பயணசீட்டு கணினி மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மனுவை பெற்றுக்கொண்ட திருச்சி சிவா, ரயில்வே துறை உயரதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.