கோபாலப்பட்டினம் அவுலியா நகரில் சாலை அளவிடும் பணி மற்றும் தற்காலிக சாக்கடை வெளியேற்றும் பணியை மேற்கொண்ட ஊராட்சி நிர்வாகம்..!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டினம் அவுலியா நகர் பகுதியில் உள்ள மிகவும் மோசமடைந்துள்ள ஆறு தெருக்களின் சாலைகளை
புதிய சாலை அமைக்க நேற்றைய தினம் 09.10.2019 புதன்கிழமை ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து வந்திருந்த அரசு அலுவலர்கள் முதற்கட்டமாக ஆறு தெருக்களின் சாலைகளையும் அளக்கும் பணியில் ஈடுபட்டனர். அளவை பணியின்போது அவுலியா நகர் பகுதி மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஊர் ஜமாத் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி:

அவுலியா நகர் பகுதியில் இருந்து செல்லக்கூடிய கழிவு நீர் கால்வாய்களை நேற்றை தினம் 09.10.2019 புதன்கிழமை முதல் தூர்வாரும் பணி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் GPM மீடியா சார்பாக வாழ்த்துக்கள்.








கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments