இடி, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
பருவமழை காலங்களில் இடி, மின்னல் போன்ற இயற்கை அபாயங்கள் ஏற்படும் போது தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பொதுமக்கள் கையாண்டு மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு மற்றும் உடமைகளுக்கு ஏற்படக்கூடிய சேதங்களை தவிர்த்திட வேண்டும். பொதுமக்கள் இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பயணத்தை தவிர்க்க வேண்டும். வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.
குழந்தைகள் வீடுகளில் உள்ளனரா என்பதையும், வளர்ப்பு பிராணிகள் கொட்டிலில் உள்ளனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் வீட்டில் உள்ள மின் மற்றும் மின்னணு சாதனங்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளனவா என உறுதி செய்தல் வேண்டும். இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ மரத்தடியிலோ உயர் மின் கோபுரங்கள் மற்றும் இரும்புவேலிகளின் அருகில் நிற்பதோ, தங்குவதோ கூடாது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
கால்நடைகளை மரத்தில் கட்டுவதையோ, வெளியில் மேய்ச்சலுக்கு விடுவதையோ தவிர்க்க வேண்டும். இடி, மின்னலின் போது மின்னணு சாதனங்களை அறவே பயன்படுத்துதல் கூடாது. இடி, மின்னலின் போது மேற்கூரை வேயப்பட்ட கட்டிடங்களின் கீழ் ஒதுங்க வேண்டும். மிக உயரமான பகுதிகளில் உள்ள கட்டிடங்களின் கீழ் தங்குவதை தவிர்க்க வேண்டும். ஆறுகள், குளங்கள் நீர் நிலைகளில் சிறுவர்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
இரும்பு கொடிகம்பம், டி.வி, டிஸ் ஆண்டனா, செங்குத்தான உலோகங்களினாலான சாதனங்களின் அருகில் நிற்கக் கூடாது. இருசக்கர வாகனங்களில் (சைக்கிள் உள்பட) செல்வதை தவிர்க்க வேண்டும். உலோகத்தினாலான குடை மற்றும் பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் காய்ச்சி வடிகட்டிய நீரை பருக வேண்டும். பொது சுகாதாரத்தை பேணிகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வப்போது வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகளை கவனத்தில் கொண்டு அதன்படி பொதுமக்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பருவமழை காலங்களில் இடி, மின்னல் போன்ற இயற்கை அபாயங்கள் ஏற்படும் போது தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பொதுமக்கள் கையாண்டு மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு மற்றும் உடமைகளுக்கு ஏற்படக்கூடிய சேதங்களை தவிர்த்திட வேண்டும். பொதுமக்கள் இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பயணத்தை தவிர்க்க வேண்டும். வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.
குழந்தைகள் வீடுகளில் உள்ளனரா என்பதையும், வளர்ப்பு பிராணிகள் கொட்டிலில் உள்ளனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் வீட்டில் உள்ள மின் மற்றும் மின்னணு சாதனங்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளனவா என உறுதி செய்தல் வேண்டும். இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ மரத்தடியிலோ உயர் மின் கோபுரங்கள் மற்றும் இரும்புவேலிகளின் அருகில் நிற்பதோ, தங்குவதோ கூடாது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
கால்நடைகளை மரத்தில் கட்டுவதையோ, வெளியில் மேய்ச்சலுக்கு விடுவதையோ தவிர்க்க வேண்டும். இடி, மின்னலின் போது மின்னணு சாதனங்களை அறவே பயன்படுத்துதல் கூடாது. இடி, மின்னலின் போது மேற்கூரை வேயப்பட்ட கட்டிடங்களின் கீழ் ஒதுங்க வேண்டும். மிக உயரமான பகுதிகளில் உள்ள கட்டிடங்களின் கீழ் தங்குவதை தவிர்க்க வேண்டும். ஆறுகள், குளங்கள் நீர் நிலைகளில் சிறுவர்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
இரும்பு கொடிகம்பம், டி.வி, டிஸ் ஆண்டனா, செங்குத்தான உலோகங்களினாலான சாதனங்களின் அருகில் நிற்கக் கூடாது. இருசக்கர வாகனங்களில் (சைக்கிள் உள்பட) செல்வதை தவிர்க்க வேண்டும். உலோகத்தினாலான குடை மற்றும் பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் காய்ச்சி வடிகட்டிய நீரை பருக வேண்டும். பொது சுகாதாரத்தை பேணிகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வப்போது வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகளை கவனத்தில் கொண்டு அதன்படி பொதுமக்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.