கத்தாரில் நடைபெற்ற மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி



கத்தர் மண்டல தமுமுக-மமகவின் கிளையான இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவையின் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 18-10-2019 வெள்ளிக்கிழமை அன்று கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள அல்கோர் கிளையில் நடைபெற்றது.

இச்சொற்பொழிவு கத்தார் இஸ்லாமிய பேரவையின் பொதுச்செயலாளர் சகோ. மைதீன்ஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மெளலவி. உமர் உமரி "இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு", எனும் தலைப்பிலும் சகோ. பெரோஸ்கான் "செய்ய மறந்த கடமை" எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.


இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் அபுபக்கர் சித்திக், பாரூக், அப்பாஸ் அவர்கள் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து  கொண்டனர்.

தகவல் : அபுபக்கர் சித்திக்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments