சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைக்கு சென்ற விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. விமானி உடனடியாக கண்டுபிடித்ததால் 277 பேர் உயிர் தப்பினர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு விமானம் செல்ல தயாராக இருந்தது. அதில் 268 பயணிகளும், 9 விமான ஊழியர்களும் இருந்தனர். நடைமேடையில் இருந்து விமானத்தை ஓடுபாதைக்கு சிறிது தூரம் விமானி இயக்கினார்.
அப்போது திடீரென விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருந்ததை கண்டுபிடித்த விமானி, உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இழுவை வாகனம் மூலம் விமானம் மீண்டும் நடைமேடைக்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.
உயிர் தப்பினர்:
விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக கோளாறை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானத்தில் எந்திரக்கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு நாளை(அதாவது இன்று) அதிகாலை அந்த விமானம் தாய்லாந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்துவிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 277 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இன்னொரு விமானம்:
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு கோவையில் இருந்து விமானம் வந்தது. 169 பயணிகளும், 5 விமான ஊழியர்களும் அதில் வந்தனர். சென்னை விமான நிலைய வான் எல்லையில் நடுவானில் விமானம் பறந்து வந்தபோது, விமானத்தின் வால் பகுதியில் புகை வருவதாக திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதைக்கண்ட விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
விமான நிலையத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து சென்னையில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் இன்றி விமானத்தை விமானி தரை இறக்கினார். விமானத்தில் இருந்த பயணிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.
இதையடுத்து விமானத்தின் வால் பகுதியில் புகை வந்ததா? அல்லது புகை வருவதற்கான அலாரம் ஒலித்தது ஏன்? என்று விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு விமானம் செல்ல தயாராக இருந்தது. அதில் 268 பயணிகளும், 9 விமான ஊழியர்களும் இருந்தனர். நடைமேடையில் இருந்து விமானத்தை ஓடுபாதைக்கு சிறிது தூரம் விமானி இயக்கினார்.
அப்போது திடீரென விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருந்ததை கண்டுபிடித்த விமானி, உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இழுவை வாகனம் மூலம் விமானம் மீண்டும் நடைமேடைக்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.
உயிர் தப்பினர்:
விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக கோளாறை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானத்தில் எந்திரக்கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு நாளை(அதாவது இன்று) அதிகாலை அந்த விமானம் தாய்லாந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்துவிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 277 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இன்னொரு விமானம்:
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு கோவையில் இருந்து விமானம் வந்தது. 169 பயணிகளும், 5 விமான ஊழியர்களும் அதில் வந்தனர். சென்னை விமான நிலைய வான் எல்லையில் நடுவானில் விமானம் பறந்து வந்தபோது, விமானத்தின் வால் பகுதியில் புகை வருவதாக திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதைக்கண்ட விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
விமான நிலையத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து சென்னையில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் இன்றி விமானத்தை விமானி தரை இறக்கினார். விமானத்தில் இருந்த பயணிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.
இதையடுத்து விமானத்தின் வால் பகுதியில் புகை வந்ததா? அல்லது புகை வருவதற்கான அலாரம் ஒலித்தது ஏன்? என்று விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.