ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.. நவாஸ்கனி எம்பி பாராளுமன்றத்தில் பேச்சு.,



ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் விமான நிலையம் அமைக்க ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

இது குறித்து பாராளுமன்றத்தில் எம்பி நவாஸ்கனி, ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதில் இருந்தும் மக்கள் அதிகப்படியாக வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் பல சுற்றுலா தளங்களும், புனிதத் தலங்களும் நிறைந்ததாக ராமநாதபுரம் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது வணிக ரீதியாக இந்திய பொருளாதாரத்திற்கு ராமநாதபுரம் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கின்றது.

துபாய் , சவுதி அரேபியா , ஹாங்காங், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிடையேயான வணிக ரீதியான தொடர்பு கொண்ட மாவட்டமாக திகழ்கிறது.

பருத்தி, மிளகாய், கடல் உணவுகள் என பல வணிகங்களுக்கு முக்கிய பகுதியாக விளங்குகின்றது.

தற்போது மதுரை விமான நிலையத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு 200 கிலோ மீட்டர் தொலைவு சாலை மார்க்கமாக பயணம் செய்ய வேண்டி இருக்கின்றது. 

எனவே வணிகர்கள், சுற்றுலா பயணிகள், புனித யாத்திரைகள், மற்றும் தொகுதி மக்கள் பயன்பெறும் வண்ணம் (பிராந்திய விமான இணைப்பு திட்டம்) UDAN Scheme - மூலம் ராமநாதபுரத்தில்   விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என மக்களவையில் எம்பி நவாஸ்கனி உரையாற்றினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments