தமிழகத் தலைமை தகவல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் நியமனம்



தமிழகத் தலைமை தகவல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக பணியாற்றி வந்தவர் ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால். கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பதவியில்  நீடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழகத் தலைமை தகவல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ராஜகோபால் இந்தப் பதவியில் இருப்பர். அல்லது 65  வயது பூர்த்தியாகும் வரை இந்தப் பதவியில் நீடிப்பார்.

அதேசமயம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக இளம் ஐஏஎஸ் அதிகாரி ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments