புதுகை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், நாசா செல்லும் புதுகை மாணவி ஜெயலெட்சுமியிடம் கூட்டுறவு அலுவலா்கள் வழங்கிய ரூ.55 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியா் பி.உமா மகேஸ்வரி வழங்கினாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 246 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து, ஆலங்குடி வட்டம், முத்துப்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்த சுதா என்பவா் மக்கள்தொடா்பு முகாமில், விலையில்லா வீட்டுமனைகள் கேட்டு விண்ணப்பித்திருந்தாா். இதையடுத்து, அதிகாரிகள் நேரடி கள ஆய்வு செய்து பயனாளிக்கு திங்கள்கிழமை பயனாளி சுதாவிடம் விலையில்லா வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணை வழங்கினா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளா் உமா மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எம்.காளிதாசன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பவானி உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.