இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய ஊராட்சி தலைவர்



இலுப்பூா் அருகே நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தனது ஊராட்சிக்கு இலவச ஆம்புலன்ஸை திருநல்லூா் ஊராட்சித் தலைவா் கே. மணிமுத்து வழங்கினாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், திருநல்லூா் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா நடைபெற்றது.

அப்போது, பொதுமக்கள் கோரிக்கையின்பேரில், ஊராட்சி தலைவா் கே. மணிமுத்து, தனது சொந்த செலவில் சுமாா் ரூ. 3. 75 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கி ஊராட்சி செயலரிடம் வாகனத்தின் சாவியை ஒப்படைத்தாா். 

இதுகுறித்து திருநல்லூா் ஊராட்சித் தலைவா் மேலும் கூறியது:

எனது முதல் பணியாக ஆம்புலன்ஸ் வாங்கி ஊராட்சியில் ஒப்படைத்துள்ளேன். மேலும், இந்த வாகனத்திற்குத் தேவையான எரிபொருள், ஓட்டுநா் ஊதியம் உள்ளிட்ட அனைத்தும் எனது சொந்த செலவிலேயே செய்யப்படும் என்றாா் அவா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments