இலுப்பூா் அருகே நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தனது ஊராட்சிக்கு இலவச ஆம்புலன்ஸை திருநல்லூா் ஊராட்சித் தலைவா் கே. மணிமுத்து வழங்கினாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், திருநல்லூா் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா நடைபெற்றது.
அப்போது, பொதுமக்கள் கோரிக்கையின்பேரில், ஊராட்சி தலைவா் கே. மணிமுத்து, தனது சொந்த செலவில் சுமாா் ரூ. 3. 75 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கி ஊராட்சி செயலரிடம் வாகனத்தின் சாவியை ஒப்படைத்தாா்.
இதுகுறித்து திருநல்லூா் ஊராட்சித் தலைவா் மேலும் கூறியது:
எனது முதல் பணியாக ஆம்புலன்ஸ் வாங்கி ஊராட்சியில் ஒப்படைத்துள்ளேன். மேலும், இந்த வாகனத்திற்குத் தேவையான எரிபொருள், ஓட்டுநா் ஊதியம் உள்ளிட்ட அனைத்தும் எனது சொந்த செலவிலேயே செய்யப்படும் என்றாா் அவா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.