71-வது இந்திய குடியரசு தினவிழாவை முன்னிட்டு ரியாத் மாநகரில் TMMK நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்.!



இந்தியாவின் 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாத் மத்திய மண்டலம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நியூ செனையா கிளை மற்றும்  கிங் பஹத் மெடிக்கல் சிட்டி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 31/01/2020 வெள்ளிக்கிழமை அன்று நியூ செனையா பகுதியில் உள்ள துபாய் மார்க்கெட் அருகில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.


இந்த இரத்ததான முகாமிற்கு கிளை தலைவர் அபுஹுரைரா அவர்கள் தலைமை தாங்க, மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகிக்க,  ரியாத் மண்டல மருத்துவரணி செயலாளர் மங்களகுடி தாஹா ரசூல் அவர்கள் மண்டல நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.


இந்த இரத்ததான முகாம் நியூ செனையா கிளை தலைவர் மெளலவி அபு ஹுரைரா அவர்கள் கிராத் ஓத, இரத்ததான வங்கியுடனான தொடர்பை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த ரியாத் மத்திய மண்டல சமூக நலத்துறை துணைச் செயலாளர் அறந்தை சித்திக் அவர்கள் வரவேற்புரையாற்ற, தமுமுகவிற்கு தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வழங்கிய சமூக ஆர்வலர் மற்றும் தொழிலதிபர் கோட்டைப்பட்டினம் அபுதாஹிர் மற்றும் ரியாத் மத்திய மண்டல சமூக நலத்துறையின் செயல்பாட்டிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்  சவூதி அரேபியா நாட்டை சேர்ந்த சகோ சுல்தான் அவர்களும் இணைந்து இரத்ததான முகாமை துவங்கி வைத்தனர்.


இந்த இரத்ததான முகாமில் சுமார் 75-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் பங்கேற்று தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர்.

இரத்ததான முகாமிற்கான வாகன வசதியை பத்தாஹ் கிளை தலைவர் நாமக்கல் தாஜ்தீன் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார், மேலும் இரத்ததான கொடையாளர்களுக்கும் ,களப்பணியாளர்களுக்கும் காலை மற்றும் மதிய உணவு, தேநீர், பழச்சாறு மற்றும் தண்ணீர் போன்றவைகளை சமுதாய சொந்தங்கள் அள்ளி கொடுத்திருந்தனர்.


இந்த இரத்ததான முகாமிற்காக கடந்த இரண்டு வாரங்களாக கிளை நிர்வாகிகள் கடும் குளிரிலும் மிக சிறப்பான முறையில் அழைப்பு பணியில் ஈடுபட்டனர் என்று கூறினால் மிகையாகாது.


இந்த இரத்ததான முகாமை திறப்பு விழா செய்த சகோதரர்களுக்கும், முகாமை ஒருங்கிணைத்த சகோதரர்களுக்கும், முகாமிற்கான உணவு மற்றும் வாகன ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கும், பல கிளைகளிலிருந்து நியூ செனையாவிற்கு வருகை புரிந்த சகோதரர்களுக்கும், களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும்,  ஊடக ரீதியாக உதவி செய்த ரியாத் மண்டல ஊடகப்பிரிவு துணைச் செயலாளர் கோபாலப்பட்டிணம் முஹம்மது ரிஸ்வான் மற்றும் முன்னாள் மண்டல தனி செயலாளர் அரசநகரிப்பட்டினம் ஆசிக் இக்பால் அவர்களுக்கும், இரத்த வங்கி ஊழியர்களுடன் இணைந்து செயல்பட்ட கிளை உறுப்பினர் சகோ ஜாவித் அவர்களுக்கும் முகாமிற்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்கிய மண்டல - கிளை நிர்வாகிகளுக்கும் நியூ செனையா கிளை சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இது போன்று ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம்.


உங்கள் அனைவரின் அனைத்து உழைப்புகளையும் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் பொருந்தி கொள்வானாக!!!

இறுதி நிகழ்வாக வருகை புரிந்த அனைத்து சகோதரர்களுக்கும் கிளை செயலாளர் திருச்சி ரஹ்மத்துல்லா அவர்கள் நன்றியுரையாற்ற, துவாவுடன் முகாம் இனிதே நிறைவடைந்தது.

தகவல்:
#தமிழ் தஃவா தமுமுக மற்றும் மமக
#ஊடகப்பிரிவு 
#மத்திய மண்டலம் 
#ரியாத், சவூதி அரேபியா.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments