எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 19 ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற பாரதி, மணி, சந்திரகுமார், அசோக் ஆகிய நான்கு மீனவர்கள் படகு மூழ்கியதில் நடுக்கடலில் தத்ளித்தனர்.
அப்போது நெடுந்தீவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களை கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரனைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.
வெள்ளிக்கிழமை நான்கு மீனவர்களின் வழக்கு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன் இனிமேல் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தால் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து நிபந்தனைகளுடன் மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.