சமீபத்தில் ஏற்பட்ட படகு விபத்தையடுத்து, காரங்காட்டில் படகு போக்குவரத்து துவங்குவதில் தாமதம் ஆவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துஉள்ளனர்.
தொண்டி அருகே காரங்காடு கடலில் சதுப்பு நிலக் காடுகள் அமைந்திருப்பதால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டது. இதனால் விடுமுறை நாட்களில் ஏராளமானசுற்றுலாப் பயணிகள் சென்று வந்தனர்.ஜன.16ல் ஒரு படகில் 17 பேர் சென்ற போதுபடகு கவிழ்ந்ததில் அஜித் என்ற ஆறு வயது சிறுவன் மூச்சு திணறி இறந்தான்.
இச்சம்பவத்தால் அங்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொண்டி மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து படகு ஓட்டுநர் உள்ளிட்ட இருவரை கைது செய்துபடகை பறிமுதல் செய்தனர். சேதமான படகை சரி செய்து மீண்டும் கடலில் செல்லவனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால், கோர்ட்டில் வழக்கு நடைபெறுவதால்படகை சரி செய்ய முடியவில்லை.
இதனால், 20 நாட்களுக்கு மேல் ஆகியும் படகு போக்குவரத்து துவங்கவில்லை. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், மாற்று படகு விடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். விரைவில் படகு போக்குவரத்து துவங்கும். படகில் செல்பவர்கள்கண்டிப்பாக லைப் ஜாக்கெட் அணிந்து செல்ல வேண்டும், என்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.