பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.100 கோடிக்கான பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில் 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 170-க்கும் மேற்பட்ட வங்கிகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சுமார் ரூ.100 கோடிக்கான பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தவேலைநிறுத்த போராட்டத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட அனைத்து வங்கி ஊழியர் ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில் புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க பொதுசெயலாளர் பாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஊரக வளர்ச்சித்துறை வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராமதுரை, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ரவிசங்கர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் அருணாசலம் உள்பட வங்கி ஊழியர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.