தேசிய குடிமக்கள் பதிவேடு எதிர்ப்பாக தேசிய வேலைவாய்ப்பின்மை பதிவேடு காங்கிரஸ் கட்சியால் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. ஜெய்பூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் இதனை தொடங்கி வைத்தார்.
குடியரிமைச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய வேலைவாய்ப்பின்மை பதிவேடு (என்ஆர்யு) காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல், இதனை வெளியிட்டார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்களிடம், வேலைவாய்ப்பற்றோர் 8151994411 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை அடையாளம் காணும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 5 லட்சம் இளைஞர்கள், தங்களுக்கு வேலையில்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இணைந்துள்ளனர். இவர்களில் 58 ஆயிரம் பேர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது இதர மாநிலங்களை விட அதிக எண்ணிக்கையாகும்.
வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் அவர்களின் கைபேசி எண்களின் மிஸ்டுகால் மூலம் கணக்கெடுப்பு நடத்தும் @INCTamilNadu தலைவர் @KS_Alagiri மற்றும் @TN_PYC தலைவர் @Hassan_tnpyc மற்றும் @IYC செயலாளர் @JebiMather சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினர் #NaukariKiBaat pic.twitter.com/WTFkYNrIUa— Tamil Nadu Youth Congress (@TN_PYC) January 24, 2020
அடுத்த 3 மாதங்களுக்கு இந்த என்ஆர்யு போராட்டம் நடைபெறும். அப்போது நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் மொத்த எண்ணிக்கை தெரியவரும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.