கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் கிருமி நாசினி தெளிப்பு.! (படங்கள்)



கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அவுலியா நகர் பகுதிகளில் கோபாலப்பட்டிணம் இளைஞர்கள் சார்பாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதி முழுவதும் இளைஞர்கள் சார்பாக நேற்று 28.03.2020 சனிக்கிழமை கொரோனா வைரஸ் வராமல் தடுக்கும் விதமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கோபாலப்பட்டிணம் இளைஞர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிா்க்க விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், கைகளை அடிக்கடி கழுவுவதற்கும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.






கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments