அறந்தாங்கியில் பிடிபட்ட மனித முகம் கொண்ட ஆந்தை.!



புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனித முகம் கொண்ட ஆந்தை சுற்றித் திரிந்தது. அதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


இந்த நிலையில் நேற்று அறந்தாங்கி பழைய ஆஸ்பத்திரி சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு மனிதமுகம் கொண்ட ஆந்தை வந்தது. இதை ஆச்சரியமாக பார்த்த அப்பகுதி மக்கள், அந்த ஆந்தையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் அந்த ஆந்தையை காட்டுப்பகுதிக்கு கொண்டு விட்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments