குடிபோதையில் கணவர் தகராறில் ஈடுபட்டதால் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
மணமேல்குடி அடுத்த தட்டான்வயல் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 40), மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். இவரது மனைவி வாசுகி. நீண்டநாட்களாக மூடப்பட்டு இருந்த மதுக்கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டதைதொடர்ந்து தமிழ்செல்வன் மதுகுடித்துவிட்டு வந்து வாசுகியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினாராம்.
இதனால் மனம் உடைந்த வாசுகி, இவ்வளவு நாட்களாக மதுக்கடை இல்லாமல் எனது கணவர் எந்த சண்டையும் போடாமல் இருந்தார். இதனால் என் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருந்தேன். தற்போது மதுக்கடை திறந்ததும் குடித்துவிட்டு வந்து சண்டை போட்டார். எனவே மதுக்கடையை அடைக்கவேண்டும் என கூறி திருவாப்பாடி மதுக்கடைக்கு முன்பு மண்எண்ணெய் கேனுடன் வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.