புதுக்கோட்டை மாவட்டத்தில் நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகள் திறக்க அனுமதியில்லை என்று கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( மே-4) முதல் மே-17 நள்ளிரவு 12 மணி வரை அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் குளிரூட்டப்பட்ட, குளிரூட்டப்படாத நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகள் (சில்லறை, மொத்த வியாபாரம்) திறக்க அனுமதியில்லை.
மேலும் இதனை பின்பற்றாதவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தொற்று நோய்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments