2,000 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்ட தொழிலாளி ஒருவர் வீட்டிற்குச் சென்றவுடன் பாம்பு கடித்து உயிரிழந்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான சல்மான் கான் என்ற இளைஞர் பெங்களூரூவில் கட்டுமான வேலை பார்த்து வந்துள்ளார். ஊரடங்கால் வேலை இல்லாத நிலையில், ஷ்ராமிக் ரயிலில் சொந்த ஊர் செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் ரயிலில் டிக்கெட் கிடைக்காததால், தனது நன்பர்களுடன் சேர்ந்து நடைப்பயணமாகவே தனது சொந்த ஊருக்குப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இறுதியில் சுமார் 12 நாட்களாக 2,000 கி.மீ பயணம் செய்து தனது சொந்த கிராமத்தை அடைந்த அவர், தனது தாயைச் சந்தித்து, வீட்டிற்குத் திரும்பியதற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் சில நிமிடங்கள் கூட அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
வீட்டிற்கு வந்த சல்மான் கான், காய், கால்களை கழுவுவதற்காக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். நீண்ட நேரமாக சல்மான் வீட்டிற்குள் வராததைப் பார்த்த அவரது தாய், பின்புறம் சென்று மகனைத் தேடியுள்ளார். அப்போது, பின்புறம் உள்ள கரும்பு தோட்டத்தில் மகன் பாம்பு கடித்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
2,000 கிலோமீட்டர் நடைப்பயணத்திற்கு பிறகு தன்னைப் பார்க்க வந்த மகன் உயிரற்று கிடப்பதைக் கண்ட தாய் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அங்குள்ளவர்களை அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்வளவு நீண்ட தூர பயணத்திற்குப் பின் இளைஞர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.