சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு கோபாலப்பட்டிணத்தில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய இணையவழிப் போராட்டம்.!



சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலைக்கு நீதி கேட்டு புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் கோபாலப்பட்டிணத்தில் இன்று 26.06.2020 வெள்ளிக்கிழமை கோபாலப்பட்டிணம் தமுமுக & மமக கிளை சார்பில் இணையவழி போராட்டம்  நடைபெற்றது.


இதில் கோபாலப்பட்டிணம் தமுமுக கிளை,ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வம் கொண்ட இளைஞர்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர். 

இணையவழி போராட்டத்தில் தமிழக அரசே…! சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலைக்கு காரணமான காவல்துறையினரை பணிநீக்கம் செய்து கொலைவழக்கில் கைது செய்திடு..! 

பொய் சான்றிதழ் வழங்கிய மருத்துவர், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலையை அறிந்தும் சிறைக்கு அனுப்பிய நீதியியல் நடுவர் ஆகியோரை பணிநீக்கம் செய்திடு!! 

மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு இணையவழிப் போராட்டம்.

என்ற கோஷங்களுடன் கண்டனத்தை பதிவு செய்தனர்.






தகவல்:
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சி,
கோபாலப்பட்டிணம் கிளை,
ஆவுடையார்கோவில் ஒன்றியம், 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments