சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு கோட்டைப்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சி இணையவழிப் போராட்டம்.!



கோட்டைப்பட்டினம் கிளை (புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்) சார்பில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு இணையவழிப் போராட்டம் நடைபெற்றது.


தமிழக அரசே…! சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலைக்கு காரணமான காவல்துறையினரை பணிநீக்கம் செய்து கொலைவழக்கில் கைது செய்திடு..! பொய் சான்றிதழ் வழங்கிய மருத்துவர், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலையை அறிந்தும் சிறைக்கு அனுப்பிய நீதியியல் நடுவர் ஆகியோரை பணிநீக்கம் செய்திடு போன்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் கிளை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று 26.06.2020 இணையவழிப் போராட்டம் நடைபெற்றது.


மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் _A,அபுசாலிஹ் அவர்கள் தலைமையில் மற்றும் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை பதாகையுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments