அறந்தாங்கி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பணியிட மாற்றம்.!



அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை வார்டுக்கு அடுத்ததாக கொரோனா வார்டு அமைக்கப்பட்டு அங்கு கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.


ஆனால், குழந்தைகள் வார்டுக்கு அருகே கொரோனா வார்டு அமைக்கக்கூடாது, பல வருடங்களாக இந்த மருத்துவமனை பிரசவ இறப்பு இல்லாத மருத்துவமனையாக இருந்து வருகிறது. எனவே கொரோனா வார்டை அங்கிருந்து மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையின் தலைமை டாக்டராக பணிபுரிந்து வந்த டாக்டர் ரவி, பணி இடமாற்றம் செய்யப்படுவதாக சுகாதாரத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments