திருவண்ணாமலையில் சோறு வடித்த சுடுநீரில் தவறி விழுந்த குழந்தை பலி..



திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள கனகம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், நெசவு தொழிலாளி. அவருடைய மனைவி யுவராணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

அதில், இளைய மகன் மணிஸ்வரன் (வயது 1½). கடந்த 12-ந்தேதி மணிஸ்வரன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது சாதம் வடித்த சுடுதண்ணீரில் தவறி விழுந்துவிட்டான். 

இதனையடுத்து குழந்தையை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டான். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Post a Comment

0 Comments