அம்மாபட்டினத்தில் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற சிறப்பு முகாம்



மணமேல்குடி அடுத்துள்ள அம்மாபட்டினம் தவ்ஹீத் பள்ளிவாசலில் சிறுபான்மையின மாணவ-மாணவிகள் 2020-2021-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற சிறப்பு முகாம், இலவச கட்டாய கல்விக்கு விண்ணப்பிக்கும் முகாமும் நடைபெற்றது.

இதில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளி மாணவர்களுக்கும், டிப்ளமோ, இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற்கல்வி பயிலக் கூடிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை பெற ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் எண், வங்கி கணக்கு எண், தொலைபேசி எண் ஆகியவை பதிவு செய்யப்பட்டு ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கப்பட்டது. மேலும் இம்முகாமில் இலவச கட்டாயக் கல்விக்கும் விண்ணப்பிக்கப்பட்டது. 

இதில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இந்த முகாம் நடைபெற்றது. இதில் அதிகமான மாணவர்கள் பெற்றோர்களுடன் வருகை தந்து பதிவு செய்தனர். இந்த முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மாணவரணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments