மணமேல்குடி அடுத்துள்ள அம்மாபட்டினம் தவ்ஹீத் பள்ளிவாசலில் சிறுபான்மையின மாணவ-மாணவிகள் 2020-2021-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற சிறப்பு முகாம், இலவச கட்டாய கல்விக்கு விண்ணப்பிக்கும் முகாமும் நடைபெற்றது.
இதில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளி மாணவர்களுக்கும், டிப்ளமோ, இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற்கல்வி பயிலக் கூடிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை பெற ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் எண், வங்கி கணக்கு எண், தொலைபேசி எண் ஆகியவை பதிவு செய்யப்பட்டு ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கப்பட்டது. மேலும் இம்முகாமில் இலவச கட்டாயக் கல்விக்கும் விண்ணப்பிக்கப்பட்டது.
இதில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இந்த முகாம் நடைபெற்றது. இதில் அதிகமான மாணவர்கள் பெற்றோர்களுடன் வருகை தந்து பதிவு செய்தனர். இந்த முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மாணவரணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.