புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் வெளிவயல் கிராமத்தில் 8 ஏக்கர் அரசு இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இது சம்பந்தமாக மதுரை உயர்நீதி மன்றத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்த அரசு இடத்தை உடனே அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நேற்று ஆவுடையார்கோவில் தாசில்தார் வில்லியம் மோசஸ், வருவாய் ஆய்வாளர் முத்துகுமரன் தலைமையில் பொக் லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
பாதுகாப்பு
ஆக்கிரமிப்பை அகற்றும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மீமிசல் சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைசிங்கம், அய்யப்பன், மணமேல்குடி, திருப்புனவாசல் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரதன், முத்து ஆகியோர் தலைமையிலான சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.