இன்று(31-12-2020) நள்ளிரவு முதல் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் முறை மூலம் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்துவதை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. வங்கிகள், சுங்கச்சாவடிகள், தனியார் சேவை மையங்களில் ஆதார் அட்டை மற்றும் வாகனங்களின் ஆர்.சி. நகலைக் கொடுத்து ஃபாஸ்டேக் மின்னணு அட்டைகளை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.
ஃபாஸ்டேக் முறையால் 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது ரேடியோ அதிர்வெண் உதவியுடன் தானியங்கி தடுப்புகள், விலகும் என்பதால், போக்குவரத்து நெரிசல் மட்டும் இன்றி, காலவிரயம் தவிர்க்கப்படுகிறது. ஓராண்டாக ஃபாஸ்டேக் முறை அமலில் உள்ள நிலையில் 80 சதவீதம் பேர் மட்டுமே, ஃபாஸ்ட்டேக் மின்னணு அட்டையை பயன்படுத்துவதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, தொழில்நுட்பக் கோளாறுகள் முற்றிலும் களையப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் வாகன ஓட்டிகள், ஃபாஸ்டேக் முறையை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றும், கட்டாயமாக்க கூடாதென்றும் வலியுறுத்துகின்றனர். ஃபாஸ்டேக் அட்டையைப் பெற்றிட மேலும் கால அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஃபாஸ்டேக் நடைமுறை பயணத்தை எளிமையாக்கும் திட்டம் என்றாலும், அனைத்து தரப்பினரும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் கட்டமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.