ஆண்டுதோறும் 4 முறை கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். குடியரசு தினம், தொழிலாளர்கள் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். ஆனால், கடந்த ஆண்டு குடியரசு தினத்தை தவிர்த்து வேறு எந்த தினத்திலும் கூட்டம் நடத்தப்படவில்லை. கொரோனாவை காரணம் காட்டி, கூட்டங்களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யமும், திமுகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்துவது பற்றி ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா காரணமாக குடியரசு தினமான நாளை கிராமசபை கூட்டம் நடத்தக் கூடாது என சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.